கேரளாவில் போராட்டம் காரணமாக தலைக்கவசம் அணிந்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.

by Editor / 23-09-2022 11:12:48am
கேரளாவில் போராட்டம் காரணமாக தலைக்கவசம் அணிந்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமையினர் தீவிர சோதனை ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சோதனைகளை கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று முழு அடைப்புக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு பேருந்துக்கள் இயக்கம்  நடைபெற்று வருகின்றது. கொட்டாரக்கரையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பேருந்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் போராட்டம் காரணமாக அரசு பேருந்தின் ஓட்டுனர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலையில் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக்கம்  இந்த வீடியோ தற்பொழுது கேரள மாநிலத்தின் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.தமிழகத்திலிருந்து தமிழக அரசு பேருந்துக்கள் கேரளாவுக்கு இயக்கப்படவில்லை.கேரளா அரசு பேருந்துக்குள் வழக்கம் போலா தமிழகத்திற்கு வந்து சென்றவண்ணம் உள்ளன.
 

 

Tags :

Share via