வட மாநில தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை.

by Staff / 20-12-2022 05:06:05pm
வட மாநில தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை.

ஒடிசா மாநிலம், நஞ்சாம் மாவட்டம் டென்காபதூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (42). தற்போது பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வரும் இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இரவு வேலை முடிந்து வந்த இவர், மறுநாள் காலை வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் உள்பக்கம் தாளிடப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது, அங்கு மனோஜ்குமார் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக, அவரை விட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via