சசிகலா புஷ்பா வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் பரபரப்பு
தூத்துக்குடியை சேர்ந்தவர் சசிகலா புஷ்பா முன்னாள் எம்பி ஆன இவர் பாஜக மாநில துணைத்தலைவராக உள்ளார்.இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலா புஷ்பா சமூக நலன் மற்றும் மனித உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை தரக்குறைவாக பேசினார்.இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்இன்று பிற்பகல் சசிகலா புஷ்பா நாகர்கோவிலுக்கு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.
இந்த நிலையில் பி என் டி காலனியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டில் யாரும் இல்லாத நிலை வீட்டின் முன்பு இருந்த கார் கண்ணாடி வீட்டில் கண்ணாடி மற்றும் சேர் பூந்தொட்டிகள் ஆகியவற்றை உடைத்து மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.இதை அடுத்து சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு ஏராளமான பாஜக நிர்வாகிகள் குவிய தொடங்கியுள்ளனர்.
நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி சிப்காட் போலீசார்சசிகலா புஷ்பா வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :