பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

by Staff / 06-12-2023 01:26:58pm
பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சென்னை மாநகரில் பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆவின் பால் விற்பனை நிலையங்களில் பால் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை தான் காணப்படுகிறது. மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via