கணவன் கல்லால் அடித்து கொலை

by Staff / 22-11-2022 02:08:56pm
கணவன் கல்லால் அடித்து கொலை

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் மோரூர் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட தாசநாயக்கன்பாளையம் அருந்ததியர் தெரு பகுதியை சேர்ந்த தனியார் நூற்பாலை சூப்பர்வைசர் தனபால் அதே பகுதியைச் சேர்ந்த சரிதா என்பவரை காதலித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு ஜெய ஸ்ரீ (20)என்ற மகளும் நித்திஷ்குமார் (18) என்ற ஒரு மகனும் உள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான இருவரும் பிரிந்து சரிதா தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே நேற்று இரவு தனபால் தனது மனைவி சரிதாவை குடும்பம் நடத்த அழைக்க மாமியார் வீட்டிற்கு சென்ற போது மனைவிசரிதா(38), மைத்துனர் சரவணன்(44), மாமனார் குமாரசாமி(68), மாமியார் ராஜம்மாள்(68) ஆகிய நான்கு பேரும் தனபாலை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது மயங்கி கீழே விழுந்த தனபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தனபால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தனபாலின் பெற்றோர்கள் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தனபாலின் மனைவி சரிதா உட்பட நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடத்தில் கிடடுக்கு பிடி விசாரணை நடத்தியதில் தன் கணவனை கீழே தள்ளி கல்லால் தலையில் தாக்கி கொலை செய்ததை அண்ணன் தங்கை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். உடனடியாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த சங்ககிரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சங்ககிரி அருகே குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த அழைக்க சென்ற காதல் கணவனை மனைவி அண்ணனுடன் சேர்ந்து கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via