கிராம உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 23-12-2022 04:29:39pm
கிராம உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை

திருப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கம் ஊராட்சி, பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 55. இவர், ராயமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில், கிராம உதவியாளராக பணியாற்றினார். மனைவி இறந்து விட்டார்.ஜெகநாதன், கடந்த 6 மாதத்திற்கு முன், மரம் வெட்டும்போது கீழே விழுந்து உடல் நலம் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து, அவ்வப்போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வந்தார்.அந்த வகையில், நேற்று முன்தினமும், மருத்துவ மனைக்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, மனமுடைந்த ஜெகநாதன், விஷம் குடித்து வயல்வெளிப் பகுதியில் தற்கொலை செய்து கொண்டார்.இதை அறிந்த கிராம மக்கள், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். அவர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தகவல் அறிந்த மானாமதி போலீசார், ஜெகநாதன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், ஜெகநாதன் உடல் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.இறந்த ஜெகநாதன் மகன் டில்லிபாபு கொடுத்த புகாரின்படி, மானாமதி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via