அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு..
புதுச்சேரி முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோயில் அருகே இயங்கி வந்த ரெஸ்ட்ரோ பாரை குடியிருப்பு பகுதியில் இருந்து அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கல்லால் பாரை அடித்து நொறுக்கினர்.இந்த விவகாரம் தொடர்பாக பினையில் வர முடியாத 7 பிரிவின் கீழ் முத்தியால்பேட்டை போலீசார் 13 பேர் மீது தற்போது வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் ஆதரவாளர்கள் இரண்டு பேரை கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :