CRPF வீரர்கள் மீது சித்தார்த் குற்றச்சாட்டு

by Staff / 28-12-2022 03:19:26pm
CRPF வீரர்கள் மீது சித்தார்த் குற்றச்சாட்டு

நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்தில் பணியில் இருக்கும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் தனது வயதான பெற்றோரின் பைகளில் இருக்கும் நாணயங்களை எடுக்க சொல்லியும், ஆங்கிலத்தில் பேச வலியுறுத்தியும் தொடர்ந்து இந்தியிலேயே பேசியதாக இன்ஸ்டாகிராமில் குற்றம்சாட்டினார். மேலும் அவர்கள் ‘இது இந்தியா இப்படிதான் இருக்கும்’ எனவும் தனது பெற்றோரிடம் அந்த வீரர்கள் கூறியதாக தெரிவித்தார். இந்நிலையில் சித்தார்த்தின் குற்றச்ச்சாட்டு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மதுரை விமான நிலைய நிர்வாகத்திடம் எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

 

Tags :

Share via