பெண்ணை பலாத்காரம் செய்த எஸ்ஐ: வீடியோ எடுத்து மிரட்டல்

by Staff / 30-12-2022 12:42:43pm
பெண்ணை பலாத்காரம் செய்த எஸ்ஐ: வீடியோ எடுத்து மிரட்டல்

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத், கவிநகரில் எஸ் ஐ ஆக பணிப்புரிந்து வருபவர் அக்ஷய் மிஸ்ரா. இவர் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று ஒரு பெண்ணை சாலையில் நிறுத்தி, அவரது தொலைபேசி எண்ணை வாங்கியுள்ளார். மெல்ல மெல்ல அந்த பெண்ணை குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த மே 4-ம் தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவர், அவர் கொடுத்த டீயில் போதைப் பொருளை கலந்து அந்த பெண்ணிற்கு கொடுத்துள்ளார். அதை குடித்து மயங்கி விழுந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூரத்தை வீடியோ எடுத்து மிரட்டியுமுள்ளார். இதை வைத்து பலமுறை அந்த பெண்ணை தாக்கியுமுள்ளார். அந்த பெண் கருவுற்ற நிலையில் அதையும் வலுக்கட்டாயமாக கலைத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் அக்ஷய்யை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via