ஏழு அரசு நடமாடும் பணிமனைகளை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

by Admin / 31-12-2022 09:02:57pm
ஏழு அரசு நடமாடும் பணிமனைகளை முதலமைச்சர்   கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தலைமைச்செயலகத்தில்போக்குவரத்துத் துறை சார்பில் அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும் மதுரை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் ரூ. 1.02 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏழு அரசு நடமாடும் பணிமனைகளை மாண்புமிகு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இராமேசுவரம் - அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை - அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்மதுரை - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும்  முதலமைச்சர்தொடங்கி வைத்தார்.,

ஏழு அரசு நடமாடும் பணிமனைகளை முதலமைச்சர்   கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 

Tags :

Share via