6 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண்

by Staff / 04-01-2023 05:26:49pm
6 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண்

டெல்லியின் ஆதர்ஷ்நகர் பகுதியில் மற்றொரு கொடூரம் நடந்துள்ளது. சுக்விந்தர் என்ற இளைஞன், 21 வயது இளம்பெண் தன்னுடனான நட்பை துண்டித்துவிட்டாள் என்ற கோபத்தில் அவரை ஐந்து முதல் ஆறு முறை கத்தியால் குத்தினார். திங்கள்கிழமை இரவு, குற்றம் சாட்டப்பட்டவர் தப்பி ஓடினார். காயமடைந்த இளம்பெண்ணை உள்ளூர்வாசிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுக்விந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via