ஏப்ரல் முதல் பயன்பாட்டிற்கு வரும் தாழ்தள பேருந்துகள்

by Staff / 10-01-2023 12:17:48pm
ஏப்ரல் முதல் பயன்பாட்டிற்கு வரும் தாழ்தள பேருந்துகள்

மாற்றுதிறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகளில் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Tags :

Share via