மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

by Staff / 11-01-2023 03:27:27pm
 மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

இரணியல் அருகே குதிரை பந்திவிளையில் சேர்ந்தவர் செல்வஜார்ஜ் (77). இவர் ஊர் ஊராக சைக்கிளில் சென்று சித்த மருத்துவம் செய்து வந்தார். இவரது மனைவி மரியோ தங்கம்(72) கடந்த டிசம்பர் மாதம் 23 ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் காலமானார். அவரது இறுதி சடங்கு தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்த போது சித்த வைத்தியர் செல்வஜார்ஜ் உறவினர்களிடம் இரண்டு பள்ளங்கள் தயாரிப்பு செய்து கொள்ள கூறினார். ஏதோ மனவருத்தம் காரணமாக இவ்வாறு கூறினார் என்று உறவினர்கள் நினைத்தனர். அவரிடம் ஏதோ விஷம் வாடை வீசுதல் தெரிந்து அவரை தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் அஜிஸ்(49) இரணியல் போலிசில் புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via