சில வரிகளில் சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு..

by Editor / 24-11-2021 08:08:07pm
சில வரிகளில் சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு..

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை-வடகிழக்கு பருவமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

டெல்லி அரசின் இலவச புனித யாத்திரை திட்ட பட்டியலில் தமிழகத்தின் 'வேளாங்கண்ணி' தலமும் சேர்க்கப்பட்டுள்ளது--டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

கரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் என்பவரை வேனை ஏற்றி கொலை செய்த வழக்கில் வேன் டிரைவர் சுரேஷ் என்பவர் திண்டுக்கல் JM-1 நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அஞ்சாமடை கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு மகன் மோகன்.41,. இவர் இன்று காலை தனது மாட்டு தொழுகையில் உள்ள சுவிட்ச் போடும் போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து நயினார் கோயில் போலீசார் விசாரணை.
2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதி: தமிழக அரசு

பாலாற்று வெள்ளத்தால்   ஈசூர்  வள்ளிபுரம் தரைப்பாலம் அடிச்சு சென்றதால் 50 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈசூர் திருக்கழுக்குன்றம்  வல்லிபுரம் இடையே அமைந்துள்ள தரைப்பாலம் பாலாற்றில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய சுமார் 50 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


ஊத்தங்கரை அருகே எரிசாராய ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிமுதல் டிரைவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை திண்டிவனம் சாலையில் மத்திய புலனாய்வு பிரிவை சேர்ந்த போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது மத்திய பிரதேசத்தை சேர்ந்த டாரஸ் லாரி நிறுத்தி சோதனை செய்தபோது அதில் இருந்த சுமார் 35. லிட்டர் கொள்ளளவு கொண்ட 600 பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம் கடத்தி வந்த லாரியுடன் பறிமுதல் வாகனத்தை ஓட்டி வந்த பாலேந்திர சிங் டிரைவர் கைது.

தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் 
மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல மகர விழா காலங்களில்  பாரம்பரியமாக பயன் படுத்திவரும்  நீலிமலை அப்பாச்சிமேடு வழி கொரோனா தொற்று காரணமாக  கடந்த  இரண்டு ஆண்டுகளாக  மூடிஇருந்தது தற்சமயம் அதனை திறந்து விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான முதற்கட்டமாக பாதைகள் சுத்தம் செய்யப்பட்டு தயாராகி வருகின்றன.

மதுராந்தகம் மறைந்த முன்னால் நகரமன்ற உறுப்பினர் பத்மநாபன் (திமுக) மகன் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணி புரியும் உடற்பயிற்சி ஆசிரியர் ராமகிருஷ்ணன் பள்ளியில் உள்ள உடற்பயிற்சி பாகங்களில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை.

நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் அருகே மணக்கால் வடமழை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்கிற முருகானந்தம் தனது மனைவி கவிதாவைசந்தேகப்பட்டு கடந்த 2015 ஆண்டு கொலை செய்தார். 
 அவருக்கு ஆயுள் தண்டனை அளித்து நாகை மாவட்ட குற்றவியல் நீதிபதி பன்னீர்செல்வம்  தீர்ப்பளித்துள்ளார்.


சின்னசேலம் நைனார் பாளையத்தில் நிலஅளவை செய்ய ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நிலஅளவையர் சூர்யா, கிராம உதவியாளர் ஆகியோரை  லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

மழை வெள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க மத்திய அரசு உரிய நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும்-அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு வி.கே.சசிகலா அறிக்கை.


புதுக்கோட்டையில் ஜாமீன் பெற விஏஓ சான்றுகளை போலியாக தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த குணசேகரன், அபூர்வம் மற்றும் தமிழ்மணி ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51.81 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,181,983 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 258,971,278 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 234,278,420 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ. 79க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை உட்பட பிற மாவட்டங்களில் உள்ள 65 பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது.பண்ணைப் பசுமை கடைகளில் விற்க ஒரு நாளைக்கு 15 டன் தக்காளியை கொள்முதல் செய்ய கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.

சில வரிகளில் சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு..
 

Tags :

Share via