அவனியா புர ஜல்லிக்கட்டில் மூன்றாவது முறையாக முதல் பரிசு பெற்ற வீரர் விஜய்

by Admin / 15-01-2023 05:50:48pm
அவனியா புர ஜல்லிக்கட்டில் மூன்றாவது முறையாக முதல் பரிசு பெற்ற வீரர் விஜய்

தமிழ் நாட்டு மக்களின் பாரம்பரியவிளையாட்டான ஜல்லிக்கடடு போட்டி இன்று காலை 8.00மணிக்குஅவனியாபுரத்தில்தொடங்கியது. 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு 260 பேர் காளைகளை அடக்க   களத்தில்  வீரத்துடன்  குதித்தனர் .காளைகளை  அடக்கியவர்களுக்கும்  அடங்காத  மாடுகளின் உரிமையாளர்களுக்கு உடனடி அண்டாக்களும் அமைச்சர் மூர்த்தி வழங்கிய தங்ககாசையும் பெற்றுச்சென்றனர் .ஜல்லிக்கட்டில்  இறங்கி காயம்பட்ட வீரர்கள்,மாட்டு உரிமையாளர்,பொதுமக்கள் என 61 பேர் காயமடைந்தனர்.கடந்த இரண்டு முறை வென்ற விஜய் இந்த முறையும் 28மாடுகளைப்பிடித்து மீண்டும் மூன்றாவது முறையாக முதல் பரிசான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய காரைஅமைச்சர் மூர்த்தியிடம் கார் சாவியையும்  கோப்பை ,சான்றிதழ்களையும் பெற்றார்.இரண்டாவதாக அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 17 மாடுகளைப்பிடித்து அமைச்சர்  உதயநிதி  பரிசளித்த இரு சக்கர வாகனத்ைதயும்  சான்றிதழ்களையும்பெற்றார்.விளாங்குடியைச்சார்ந்த பாலாஜி 13 மாடுகளைப்பிடித்து  மூன்றாவது  பரிசாக  பசு   மாட்டையும் சான்றிதழையும் அ  மைச்சரிடமிருந்து  பெற்றனர். சிறந்த மாடுகளுக்கு மதுரை மாநகராட்சிஇரு சக்கரவாகனம்.வாஷிங்மிஸின் பரிசுகளையும் பெற்றனர் .மாலை 5.00  மணிக்கு 11சுற்றுடன் நிறைவு பெற்ற ஜல்லிக்கட்டு அடுத்து நடந்த பரிசளிப்போடு நிறைவு பெற்றது.

அவனியா புர ஜல்லிக்கட்டில் மூன்றாவது முறையாக முதல் பரிசு பெற்ற வீரர் விஜய்
 

Tags :

Share via