பான் கார்டை இணைக்க சொல்லி நூதன மோசடி

by Staff / 13-07-2023 01:05:54pm
பான் கார்டை இணைக்க சொல்லி நூதன மோசடி சென்னை விருகம்பாக்கத்தில் வங்கி கணக்குடன் பான் கார்ட்டை இணைக்காவிட்டால், வங்கி கணக்கு முடக்கப்படும் என சுகுணா என்பவரின் செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. மெசேஜில் வந்த லிங்கை சுகுணா க்ளிக் செய்தவுடன் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. போலியான லிங்க் அனுப்பி ரூ.75000 பணம் அவரிடம் இருந்து திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகுணா போலீசில் புகார் அளித்த நிலையில், நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags :

Share via