சாலை விபத்து - 3 பேர் பலி

by Staff / 16-01-2023 02:27:13pm
சாலை  விபத்து - 3 பேர் பலி

உடுமலையிலிருந்து பழனி செல்லும் சாலையில் மைவாடி பிரிவு என்ற இடத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் பலி உடுமலையில் இருந்து பழனி நோக்கி பல்சர் பைக்கில் சென்ற  சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் 31 திண்டுக்கல் மாவட்டம் பழனி சேர்ந்த கதிரேசன்22  எதிரே உடுமலை நோக்கி ஸ்ப்லெண்டர் பைக்கில் வந்த  போளரப்பட்டியை சேர்ந்த பாலச்சந்தர் 35 ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது இதில் படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் இறந்தனர் இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் காவல்துறையின் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via