இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ரா தீவு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கம் சிங்காலிலிருந்து 48 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.
Tags :