ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை... 

by Admin / 07-12-2021 12:59:54pm
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை... 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை... 


ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம்ராமலிங்கம். கல்லூரி பேராசிரியரான இவருக்கு மனைவியும்  இரு மகன்கள் 

மூத்தமகன்  பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.   ஐடி நிறுவனத்தில் வீட்டிலிருந்தபடி பணியாற்றி வருகிறார். ராமலிங்கத்திற்கு அதிகப்படியான கடன்தொல்லை. பெங்களூருவில் இருந்து மூத்த மகன் ராமலிங்கத்திற்கு தொலைபேசி வாயிலாக அழைத்துள்ளார்.
 வீட்டிலுள்ள யாரும் தொலைப்பேசி அழைப்பை எடுக்காததால் விஷ்ணு தன்னுடைய உறவினரை தொலைப்பேசி வாயிலாக அழைத்து  தெரிவித்துள்ளார். ராமலிங்கத்தின் வீட்டுக்கு சென்ற  உறவினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் ராமலிங்கம் மனைவி அனுராதா ஆகியோரும், மற்றொரு மின்விசிறியில் பரத்தும் புடவையால் தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டனர்.

  கதவை உடைத்துவீட்டின் உள்ளே சென்ற ராமலிங்கத்தின் உறவினர்கள் மூவரின் சடலத்தை மீட்டனர்.காவேரிபாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மூன்று பேரின் சடலத்தையும் மீட்டு  அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 

 

Tags :

Share via