தேசத்திற்கே அவமானமான செயல்

by Staff / 19-01-2023 01:34:41pm
தேசத்திற்கே அவமானமான செயல்

புதுக்கோட்டை வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் தேசத்திற்கே அவமானமான செயல் என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அந்த தொட்டியை இடிக்க வேண்டும், அப்பகுதி மக்களுக்கு என தனித்தொட்டி அமைக்கக்கூடாது. மத்திய, மாநில பட்டியலின ஆணையம் உள்ளது. அவர்கள் இதுவரை புதுக்கோட்டை பகுதிக்கு செல்லவில்லை. முதல்வரோ, காவல்துறையோ சொன்னால்தான் அந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது இல்லை. களத்தில் மக்களுக்கு உடனடியாக பணியாற்றி இருக்க வேண்டும் என கூறினார்.
 

 

Tags :

Share via