எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்க ‘பிரகதி’ செயல்போன் செயலி
எல்ஐசியின் வளர்ச்சி அதிகாரிகளுக்கு அவர்கள் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, எல்ஐசி வளர்ச்சி தகவல்கள், இந்த துறையில் ஏற்படும் மாற்றம் பற்றிய தகவல்களை அளிக்க ‘பிரகதி’ என்னும் செல்போன் செயலியை இதன் சேர்மன் எம்.ஆர். குமார் அறிமுகம் செய்தார்.
இதன் நிர்வாக இயக்குனர் முகேஷ் குப்தா, ராஜ்குமார், சித்தார்த் மொகந்தி, மினி லிபி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த செயலி எல்ஐ ஏஜெண்ட் செயல்பாடுகள், வணிக இலக்குகள், பிரீமியம் கலெக்க்ஷன், ஏஜென்சியை செயல்பட வைத்தல், செஞ்சுரி ஏஜெண்ட்கள் மதிப்பீடு போன்ற தகவல், பிரீமியம் கணக்கீட கால்குலேட்டர் வசதி இதில் உள்ளது என்றார். டிஜிட்டல் வசதிகளுக்கு பிரகதி செல்போன் செயலி உதவியாக இருக்கும். எல்ஐசி பாலிசிகளை விற்பனை செய்ய இது ஊக்கமளிக்கும். வாடிக்கையாளர் நல வசதிகள் இதில் உள்ளன.
ஏற்கனவே எல்ஐசி ஆனந்தா செல்போன் செயலி ஏஜெண்டுகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதேபோல ஜீவன் சாக்சயா செயலி, முதியோர் ஓய்வு பெற்றவர்களுக்கு உதவுகிறது என்றார் அவர்.
Tags :