கள்ளக்குறிச்சி கலவரம் காணொளி மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காணொளி மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் இல்லத்தில் இருந்தபடி முதலமைச்சர் இந்த ஆலோசனையில் பங்கேற்றார். அமைச்சர்களே வேலு அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டிஜிபி சைலேந்திரபாபு உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி வன்முறைக்கான காரணம் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க குழு அமைப்பது சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
Tags :