டாஸ்மாக் பாரில் வெட்டிப் படுகொலை

by Staff / 07-05-2023 12:24:02pm
டாஸ்மாக் பாரில் வெட்டிப் படுகொலை

திருச்சி மாவட் சமயபுரம் அருகே எஸ். கல்லுக்குடியைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் பாபு(28). இவர் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்கதர்களை தரிசனத்திற்கு அழைத்துச் செல்லும் இடைத்தரகராக இருந்துவருகிறார். இதேபோன்று இடைத்தரகராக செயல்படும் சுள்ளான் வெங்கடேஷ், அவரது சகோதரர் கணேசன் மற்றும் பாபு இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அரசு மதுக்கடை பாரில் மது அருந்தியபோது, பாபுவுக்கும், வெங்கடேஷ் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கடேஷ், கணேசன், விநாயகம் உள்ளிட்ட 4 பேரும் பாபுவை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via