இளைஞர் வெட்டிக் கொலை: தந்தை, மகன் கைது

by Staff / 07-05-2023 12:29:49pm
இளைஞர் வெட்டிக் கொலை: தந்தை, மகன் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுந்தரராஜபுரம் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணனுக்கும் கடந்த 2 ஆண்டுகளாக தகாத பழக்கம் இருந்தது. இதையறிந்த கனகராஜ் இருவரையும் கண்டித்தாராம். இதனால், கனகராஜிடம் அவரது மனைவி கோபித்துக் கொண்டு, தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கனகராஜ் வீட்டின் அருகே கண்ணனின் உறவினர் வீடு உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு கண்ணன் அவரது உறவினரின் வீட்டில் தங்கியிருந்தார். இதையறிந்த கனகராஜ், இவரது மகன் கணேஷ்ராஜ் (19) இருவரும் சேர்ந்து அறிவாளால் கண்ணனை வெட்டிக் கொலை செய்தனர். கனகராஜ், கணேஷ்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

 

Tags :

Share via