நாளை முற்பகல் வரை தடை

by Staff / 25-01-2023 03:40:11pm
நாளை முற்பகல் வரை தடை

சென்னையில் குடியரசுத் தின விழா நடைபெறவுள்ள நிலையில், இன்று முதல் நாளை முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களில் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது. நாளை தமிழக முதல்வர், ஆளுநர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளதால் பாதுகாப்பு பணி காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via