மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 26-01-2023 04:44:09pm
மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் காந்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி 47 வயதான வசந்தாமணி, இவர்களின் மகன் 22 வயதான தமிழரசன், இவர் சத்யா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் செய்து கொண்டு, ரத்தினபுரி ஜவகர் வீதியில் வசித்து வருகிறார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது, தமிழரசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது, இந்த நிலையில் நேற்று மது போதையில் வீட்டிற்க்கு வந்துள்ளார், அப்பொழுது இவரது மனைவி, சத்யா குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில் வீட்டில் தனியாக இருத்த தமிழரசன் மனைவியின் சேலையை பயண்படுத்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சத்யா கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, இது குறித்து தமிழரசனின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமிழரசனின் தாய், தந்தையர், மகன் இறந்தது குறித்து கதறி அழுதனர், மேலும் இது குறித்து தமிழரசனின் தாய் வசந்தா மணி, ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via