ஏவுகணை மழை.. 11 பேர் பலி
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரினால் இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளன. சமீபத்தில் ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை மழை பொழிந்தது. இதில் 11 உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிகிறது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைன் வீரர்கள் உயிர் இழந்தனர். அமெரிக்காவும் ஜெர்மனியும் டஜன் கணக்கான போர் டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புவதாக அறிவித்த மறுநாளே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :