வலி நிவாரண மாத்திரையை போதைக்காக ஊசியாக செலுத்திய இளைஞர்கள்

by Staff / 28-01-2023 12:18:18pm
வலி நிவாரண மாத்திரையை  போதைக்காக ஊசியாக செலுத்திய இளைஞர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கல்லாவி பகுதியை சேர்ந்த உபாக்(20), அசின்(23), சுபாஷ்(25) ஆகிய 3 இளைஞர்கள் சிரஞ்சி ஊசி மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கலந்து போட்டு கொண்ட சிறிது நேரத்தில் தொண்டை வரண்டு சுருண்டு விழுந்தனர். தண்ணீர் குடிப்பதற்கு முன்பாக அடுத்தடுத்து மூவரும் மயங்கினர். 3 இளைஞர்களையும் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருதுவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைக்காக இளைஞர் செய்த செயல் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via