சகோதரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தங்கை

by Staff / 28-01-2023 12:29:23pm
சகோதரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தங்கை

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் தங்கையை அக்கா பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான இளம்பெண் உயர் கல்வி கற்றுள்ளார். அவர் இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு விமானநகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், விடுமுறைக்காக அக்கா வீட்டுக்கு 18 வயது தங்கை வந்து அங்கு சில நாட்களாக தங்கியுள்ளார். இம்மாதம் 23ஆம் தேதி தங்கை உறங்கிக் கொண்டிருந்த போது, ​​அக்கா வந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். தனது அக்கா தான் சொல்வதைக் கேட்கவில்லை, தன்னிடம் அத்துமீறி துன்புறுத்தினாள் என்று தங்கை போலீசில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via