சேலத்தில் 3-வது திருமணம் செய்ய முயற்சி; வாலிபரிடம் போலீசார் விசாரணை

by Staff / 29-01-2023 03:56:49pm
சேலத்தில் 3-வது திருமணம் செய்ய முயற்சி; வாலிபரிடம் போலீசார் விசாரணை


சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், அம்மாபேட்டை மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் எனக்கும், அதே பகுதியை சேர்ந்த 29 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு எங்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் இருவரும் தற்போது பிரிந்து வாழ்கிறோம். இந்த நிலையில் எனது சகோதரி ஒருவருடன் கணவருக்கு தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்தார்.இது ஒருபுறம் இருக்க வேறு ஒருவரின் மனைவியிடம் ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை 3-வதாக திருமணம் செய்ய எனது கணவர் முயன்று வருகிறார். எனவே எனது கணவரை பிடித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் அவர் கூறியுள்ளார். அதன்பேரில் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via