நேரா வராதீங்க... வீட்டிலிருந்தே பாருங்க... சொல்கிறது தமிழக அரசு!

by Admin / 13-08-2021 12:04:14pm
நேரா வராதீங்க... வீட்டிலிருந்தே பாருங்க... சொல்கிறது தமிழக அரசு!

சுதந்திர தின விழாவைக் காண, பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்தக் குடிமக்கள் நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரணச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது

. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வயது மூப்பினைக் கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் விதமாக, மாவட்டந்தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
 
சுதந்திர தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தி குறிப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via