ஜூலை-5 - ஆகஸ்ட்-3 வரை பள்ளியில் சேர வேண்டும்.

by Editor / 03-07-2021 08:40:52am
 ஜூலை-5 - ஆகஸ்ட்-3 வரை பள்ளியில் சேர வேண்டும்.

 

தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10 முதல் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும் தேர்வானவர்கள் ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் பள்ளியில் சேர வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via