தமிழ்கத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

by Editor / 02-02-2023 02:21:23pm
தமிழ்கத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவருகிறது.இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக - வானிலை மையம் அறிவித்துள்ளது.மேலும் தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் 30 கிமீ வேகத்தில் காற்று வீசி வருவதால் தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.அடுத்த 6 மணி நேரத்தில் தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புஉள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via