சங்கரன்கோவிலில் விசாரணை கைதி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி

by Editor / 23-07-2021 06:21:32pm
சங்கரன்கோவிலில் விசாரணை கைதி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழநீலிதநல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்த 19 வயது பிரகாஷ்  பல்வேறு திருட்டு வழக்கில் ஏற்கனவே தொடர்புடையவர். 
இந்நிலையில்  மேலநீலிதநல்லூர் பகுதியில் ஆடு திருடிய வழக்கில் இவன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் சங்கரன்கோவிலில் இருந்தவரை  காவல்துறையினர் விசாரணைக்காக   தாலுகா காவல் நிலையத்திற்கு  அழைத்துச் சென்றனர். இந்நிலையில் காவல்நிலையத்தில் அமர்ந்திருந்த அவன் திடிரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனால் காவல்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவரை மீட்டு  சங்கரன்கோவில் அரசு  மருத்துமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர் . இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via