நெல்லை காவலர்களுக்கு வார விடுமுறை
திருநெல்வேலி: மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு வார விடுமுறை, பிறந்த நாள் விடுமுறை, மிகை நேர ஊதியம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக சுழற்சி முறையில் சுமார் 60 காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் அருணாச்சலம் என்பவர் மன அழுத்தம் காரணமாக மிகுந்த வருத்தத்துடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். நேநெல்லை வந்த டிஜிபி சைலேந்திரபாபு சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.இந்தச் சூழ்நிலையில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Tags :