இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

by Staff / 10-02-2023 03:46:30pm
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆதமங்கலம் முதல் வையங்குடி வரை உள்ள இணைப்பு சாலை, வையங்குடி முதல் மேலூர் வரை உள்ள சாலை, காலணி சுடுகாட்டு ரோடு ஆகிய சாலைகளை தரமான தார்ச்சாலையாக போடவும்.ஆதமங்கலம் ஆதிதிராவிடர் மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட பட்டாவை கிராம கணக்கில் ஏற்றி பட்டா வழங்கவும்.ஆதிதிராவிடர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கவும்.மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளை செயலாளர் வி. ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஆர்ப்பாட்டத்திற்கு கொளஞ்சி, துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பிரபுதாஷ் பட்வாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர் சுப்பிரமணியன், நல்லூர் ஒன்றிய செயலாளர் வி பி முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே. அமர்நாத், எ. வேல்முருகன், டி. விஜயராகவன், விச வட்ட செயலாளர் பி ராதாகிருஷ்ணன், வி. எஸ். ராமசாமி, பி. ராமசாமி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தோழர்கள்கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via