கடுமையான பனிப்பொழிவு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி

by Editor / 12-02-2023 08:31:19am
கடுமையான பனிப்பொழிவு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பட்டி வெட்டன்விடுதி பிலாவிடுதி ரெகுநாதபுரம் குளந்திரான்பட்டு நரங்கியப்பட்டு வாண்டான்விடுதி சூரக்காடு ராங்கியன் விடுதி திருமணஞ்சேரி குறும்பிவயல் கருக்காகுறிச்சி உள்ளிட்ட பகுதியில் கடுமையான பணிப்பொழிவு பெய்து வருகிறது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது அதனை தொடர்ந்து கறம்பக்குடி புதுக்கோட்டை தஞ்சாவூர் பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு மிகக் கடுமையாக பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர். மேலும் நடை பயிற்சி மேற்கொள்வோர் அதிகாலை நாளிதழ் வழங்குவோர் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வராததால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via