ஜே.இ.இ.நுழைவுத் தேர்வில் தமிழகத்திலேயே  முதல் இடம் பெற்ற மாணவர் முகுந்த் பிரதீஷ்.

by Editor / 13-02-2024 09:25:29pm
ஜே.இ.இ.நுழைவுத் தேர்வில் தமிழகத்திலேயே  முதல் இடம் பெற்ற மாணவர் முகுந்த் பிரதீஷ்.

பொறியியல் கல்விக்கான, தேசிய அளவிலான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) 2024 ஜனவரியில் நடைபெற்றது.  நாடு முழுவதிலும் இருந்து 11,70,048  மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், அகில இந்திய தரவரிசையில் (300/300) முதல் இடம் பெற்ற 23 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழகத்தில் ஓரே மாணவரான  பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யாமந்திர் பள்ளி மாணவரான முகுந்த் பிரதீஷ் தேர்வாகியுள்ளார். அவரை தமிழக அரசு சார்பில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசி வாயிலாக மாணவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ள மாணவர் முகுந்த் பிரதீஷுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

Tags : ஜே.இ.இ.நுழைவுத் தேர்வில் தமிழகத்திலேயே  முதல் இடம் பெற்ற மாணவர் முகுந்த் பிரதீஷ்.

Share via