குமரி அருகே எஸ்.ஐ  வீட்டில்  பெட்ரோல் ஊற்றி கார், எரிப்பு.

by Editor / 24-07-2021 08:19:26pm
குமரி அருகே எஸ்.ஐ  வீட்டில்  பெட்ரோல் ஊற்றி கார், எரிப்பு.

 

குமரி மாவட்டம் புத்தன் சந்தை அருகே இடைக்கோடு பகுதியில் களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு உதவிஆய்வாளராக பணியாற்றி வருபவர்  செலின் குமார் இவரது  வீட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தப்பினர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் முன்பகையா..உறவினர்களுக்கு நிலப்பிரச்சனையா என்பன உள்ளிட்ட கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

 

Tags :

Share via