அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம்

by Staff / 13-02-2023 02:33:00pm
அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடியில் மத்திய மாநில அரசு துறை நிறுவனங்கள் இணைந்து என் டி பி எல் என்ற அனல் மின் நிலையத்தை நடத்தி வருகிறது. ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இந்த அனல் மி ன்னிலையில் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளர்களே அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு என்எல்சியில் வழங்குவது போல் ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

 

Tags :

Share via