என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை-விசாரணை நிறைவு-
தென்காசி மாவட்டம், தென்காசி பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா இவர் இலத்தூர் அருகே உள்ள திருவெற்றியூர் பகுதியை சார்ந்த ஹைருன்நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அச்சன்புதூர் பகுதியில் உள்ள செங்கோட்டை - கடையநல்லூர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கி வசித்து வருகிறார்.இந்த தமபதியினருக்கு குழந்தைகள் கிடையாது.
இவர்கள் அதே பகுதியில் மலர் என்னும் பெயரில் சிமிண்ட்,மற்றும் டைல்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்திவரும் சூழலில், இன்று அதிகாலையில் அகிலேஷ் என்ற ஐ.என்.ஏ அதிகாரி தலைமையில் 50 போலீசாருடன் ஹைரூன்நிஷா இவர்களது வீட்டிற்கு சோதனைக்கு வந்தனர்.இவர்களது வீட்டில் காலை 6 மணிமுதல் மதியம் 12.40 மணிவரை தொடர்ந்து விசாரணையும், சோதனையும் நடைபெற்றது.
இதில் ஹைரூன்நிஷா செல்போன் எண்ணில் இருந்து கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 8 வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் உமர் பரூக் என்பவரது செல்போனிற்கு ஹைருன் நிஷாவின் செல்போன்எண்ணிலிருந்து தொடர்ந்து அழைப்புக்கள் சென்றதும்..தொடர்பில் இருந்ததும் அதிகாரிகளின் ஆய்வில் தெரியவரவே அதன் காரணமாக என்ஐஏ அதிகாரிகள் நிஷா மற்றும் அவரது கணவரான அப்துல்லா என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். காலை முதல் நடைபெற்ற இந்த விசாரணை காரணமாக அந்தப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இதனால், அச்சன்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இந்த சோதனை தொடர்ந்து அவரது செல்போன் உள்ளிட்டவைகளை மற்றும் அவருடைய வீடியோ, ஆடியோ வாக்குமூலங்கள் ஆகியவற்றை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் குழுவினர் சோதனை நிறைவு செய்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
Tags :