டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்ற காவலர்.

by Editor / 05-02-2022 11:01:58am
டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்ற காவலர்.

திருநெல்வேலி மாவட்டம் அரவிந்த் பெருமாள் (34).முதல்நிலைக்காவலர்சுத்தமல்லி காவல்நிலையம்,
இவர் கடந்த 12 ஆண்டுகள் காவல் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக - இந்திய பொருளாதாரம பற்றி படித்து சமிபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தமிழக கவர்னர் அவர்களிடம்  டாக்டர் பட்டம் பெற்றார்.பட்டம் பெற்ற கையோடு நாகர்கோவிலில் உள்ள S.THindu Collage-ல் வேலைக்காண அழைப்பும் வந்தது.

2.2.2022-ம் தேதிமுறை படி மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் வாழ்த்து பெற்று காவல்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பேராசிரியராக சென்றுவிட்டார். வேலை பார்த்துக்கொண்டு படித்து டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியர் பதவிக்கு சென்றது  மிகவும் பாராட்டு கூறிய செயலாகும்.
சுத்தமல்லி காவல் நிலையத்தில் நடந்த பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் உடன்பணி புரிந்த காவலர்களும், ஆய்வாளரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் .
இவருடைய மனைவி பேட்சியம்மாள் இவரும் டாக்டர் பட்டம் பெற்று திருநெல்வேலியில் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

 

Tags : டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்ற காவலர்.

Share via