சட்டப்படி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவினை நேரலை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் .
பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழக கோவில்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவினை நேரலையில் காண்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது காவல்துறையினருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில் ,இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தனியார் மண்டபங்களிலோ ,தனியார் கோவில்களிலோ நேரலை செய்வதற்கு காவல் துறையிடம் அனுமதி தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றமும் கோவில்களில் சட்டப்படி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவினை நேரலை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags :