நடுரோட்டில் கொடூர கொலை
தேசிய தலைநகர் டெல்லியில் செவ்வாய்கிழமை இரவு இந்த கொடூரம் நடந்துள்ளது. மேற்கு டெல்லியின் நங்லோயில் விஷால் மாலிக் என்ற இளைஞர் ஜிம்மிலிருந்து வந்து கொண்டிருந்தபோது சாலையில் சிலருடன் சண்டையிட்டார். அவர்கள் விஷாலை கடுமையாக தாக்கினர். உடனே தனது பைக்கை அங்கேயே விட்டுவிட்டு, விஷால் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். தொடர்ந்து விஷால் தனது சகோதரர் சாஹிலை அனுப்பி சாலையில் விட்டுவிட்டு வந்த பைக்கை எடுத்து வர அனுப்பினார். அங்கு காத்திருந்த குற்றவாளிகள் சாஹிலை குத்திக் கொலை செய்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :