பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

by Staff / 16-02-2023 01:23:04pm
பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

டெல்லியில் பழங்குடியினர் திருவிழாவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி வியாழன் அன்று தேசிய தலைநகர் டெல்லியில் மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் தேசிய பழங்குடியினர் திருவிழாவை தொடங்கி வைத்தார். பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிரதமர் அலுவலக அறிக்கையின்படி, பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினைப்பொருட்கள், உணவு வகைகள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவற்றின் உணர்வைக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via