முன்னாள் முதல்வரை கொல்லுங்கள் - அமைச்சர் அஸ்வத்த நாராயணா சர்ச்சை பேச்சு

by Staff / 17-02-2023 12:19:52pm
முன்னாள் முதல்வரை கொல்லுங்கள் - அமைச்சர்  அஸ்வத்த நாராயணா சர்ச்சை பேச்சு

கர்நாடக அமைச்சர் அஸ்வத்த நாராயணா சர்ச்சைக்குறிய வகையில் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையாவை கொல்ல  வேண்டும் என்றும், திப்பு சுல்தான் கொல்லப்பட்டது போல் சித்தராமையாவும் கொல்லப்பட வேண்டும் என்றார். ஹூரிகவுடாவும், நஞ்சேகவுடாவும் திப்புசுல்தானை மேலே அனுப்பியது போலத்தான் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த சித்தராமையா, காந்தியை கொன்றவரை வணங்குபவர்களுக்கு இதுபோன்ற வார்த்தைகள் வரும் என்றும், அந்த அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

 

Tags :

Share via