பிட்காயின்விவகாரம்:ரூ 12 லட்சம் மோசட ஒருவர் கைது  

by Editor / 17-02-2023 07:08:05pm
 பிட்காயின்விவகாரம்:ரூ 12 லட்சம் மோசட ஒருவர் கைது  

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் (48) என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள whatsapp எண்ணில் தொடர்பு கொண்டு பின்னர் அவர்கள் கொடுத்த Protonforex.com என்ற இணையத்தில் ரூபாய் 12 இலட்சத்து 10 ஆயிரத்தி 740 ரூபாய்  முதலீடு செய்துள்ளார்.

 இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

 ராமர் அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைப்படி ஏடிஎஸ்பி கார்த்திகேயன்  மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர் மற்றும்  வசந்தகுமார் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் மேற்படி ராமரை மோசடி செய்த கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிராஜ் மகன் கருணாகரன் (32) என்பவரை கடந்த 03.02.2023 அன்று கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு எதிரியான திருவள்ளுர் காக்கலூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த எபினேசர் மகன் ஓபேத் பால் (38) என்பவரை அவரது வீட்டருகே வைத்து தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்த லேப்டாப் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். ஐஏல் ஆஜர்படுத்தினர்..

 

Tags :

Share via