வரதட்சனை கேட்டு கொடுமை-நான்கு பேர் மீது வழக்கு

by Staff / 18-02-2023 01:59:03pm
வரதட்சனை கேட்டு கொடுமை-நான்கு பேர் மீது வழக்கு

ஈரோடு மாவட்டம் கோனார் பாளையம் பகுதியை சேர்ந்தவர், 24 வயதனா நந்தினி, இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், கடந்த 09. 03. 22 அன்று, இரண்டாவதாக கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை, , திருமணம் செய்து கொண்டார், திருமணத்தின் போது, நந்தினியின் பெற்றோர், வரதட்சணையாக 25 சவரன் நகைகளை வழங்கியுள்ளனர், அதன் பிறகு, பிரசாந்த், அவரது தந்தை வெங்கடாச்சலம், இவரது மனைவி ஈஸ்வரி, பிரசாந்தின் தம்பி பிரவீன் ஆகியோர் சேர்ந்து கொண்டு கூடுதலாக 15 சவரன் நகைகளை வரதட்சணையாக கேட்டுள்ளனர், இதற்கு நந்தினி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார், இதனால் கணவர் வீட்டில் உள்ளவர்கள் நந்தினியை தினமும் தகாத வார்த்தைகளால் திட்டி கொடுமை செய்துள்ளனர், இதனால் நந்தினி, ஈரோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார், இதனூ தொடர்ந்து நந்தினி, தனது பெற்றோருடன் கொவை வந்து கணவர் வீட்டில் இது குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர், ஆனால் இவரது கணவரின் குடும்பத்தினர் நந்தினி மற்றும் அவரது பெற்றோர்களை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர் இதனைத் தொடர்ந்து இது குறித்து நந்தினி நேற்று ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின், அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நந்மினியின் கணவர் உட்பட நான்கு பேர் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via