காட்டுவிலங்குகளை வேட்டையாட வைத்த வெடி வைத்த பழத்தைத் தின்ற பசுமாடு படுகாயம். 

by Editor / 19-02-2023 10:34:46am
காட்டுவிலங்குகளை வேட்டையாட வைத்த வெடி வைத்த பழத்தைத் தின்ற பசுமாடு படுகாயம். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர்  இந்திரா நகர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மகன் சீமான்  இவா், அப்பகுதியில் உள்ள மெகராஜ் நகர் தனியாா் பள்ளி அருகேயுள்ள பறிம்பு மலைப்பகுதியில் சீமானின் தாயார் சந்தன மாரி  பசுமாட்டை நேற்று மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றாா். அப்போது மாடு அங்கே கிடந்த பழத்தைக் கடித்ததாம். இதில், பழம் வெடித்ததில் முகம் சிதறி மாடு படுகாயம் அடைந்தது . விலங்குகளை வேட்டையாடுவதற்காக அந்தப் பழத்துக்குள் மா்ம நபா்கள் வெடி வைத்திருந்தது தெரியவந்தது.தகவலின்பேரில் கடையநல்லூர் போலீஸாரும், வனத் துறையினரும் சென்று ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியினா் கூறும்போது, இரை தேட வரும், மான் மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை சிலா் வேட்டையாடி வருகின்றனா்.மேய்ச்சலுக்கு வரும் நூற்றுக்கணக்கான கால்நடைகளும், அருகேயுள்ள வனத் துறைக்கு சொந்தமான மலைப் பகுதியிலிருந்து வரும் மான் மிளா, காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகளும்  வரும் இதனை வேட்டையாடும் நபர்களை வனத் துறையும், காவல் துறையும் விசாரித்து, தொடா்புடையோரைக் கைது செய்ய வேண்டும் என்றனா்.

 

Tags :

Share via