மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

by Staff / 21-02-2023 04:03:57pm
மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

மதுரை எஸ். ஆர். வி. நகரை சேர்ந்த வேல் முருகன் மனைவி சாந்தி ( 40). இவர் திருநகர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், எனது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கூடல்புதூர் சீனிவாசா நகரை சேர்ந்த உதயகுமார் (44) என்பவர், என்னிடம் ரூ. 7 லட்சம் வாங்கினார்.ஆனால் எனது மகனுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். அப்போது அவர் போலியான பணிநியமன ஆணையை வழங்கினார். இதுபற்றி தெரியவந்ததும் நான் உடனடியாக பணத்தை வழங்கும்படி கேட்டேன்.அப்போது உதயகுமாரும், அவரது மனைவி சுமதியும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இதுகுறித்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் , சாந்தி அவர் கொடுத்த பணம், போலி நியமன ஆணை உள்பட அத்தனை ஆவணங்களையும் சமர்ப்பித்தார். இதனை போலீசார் ஆய்வு செய்து பார்த்து உதயகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக சாந்தியிடம் ரூ. 7 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரிந்தது இதனைத்தொடர்ந்து உதயகுமாரை திருநகர் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக உதயகுமார் மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via